மதுரை: மதுரை ஆதினம் மடத்தில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நாளை (மே 17) விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது.மே 18 முருகர் பூஜை, மே 19 ஞானசம்பந்தர் அவதார பெரு விழா நடக்கிறது. அன்று காலை 11:00 மணிக்கு ஞானசம்பந்தர் ஆதீன முகப்பிற்கு எழுந்தருளி திருக்கண் சாத்துதல் நடக்கிறது. மே 20 மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஞானசம்பந்தர் ஆதின முகப்பிற்கு எழுந்தருளி திருக்கண் சாத்தியபின் ஆதின மடாலயத்தில் ஞானசம்பந்தர் ஞானப்பால் அருந்தும் சிறப்பு நடக்கிறது. மே 21 அதிகாலை 4:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் ஆதினத்தை வரவேற்புடன் கோயிலுக்கு அழைத்து செல்வர்.
கோயிலில் இருந்து 63 நாயன்மார் அடங்கிய சப்பரங்கள் ஆதீன முகப்பிற்கு எழுந்தருள்வர். வழியனுப்பு விழா முடிந்து ஆதின கர்த்தர் வைகாசி மூல குருபூஜைக்கு எழுந்தருள்வார். இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என ஆதினம் தெரிவித்துள்ளார்.