மதுரை: மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம், பாரதி யுவகேந்திரா சார்பில் காஞ்சி மகா சுவாமிகள் 126 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு எஸ்.எஸ்., காலனி ஜவஹர் 2வது தெரு பிரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபத்தில் இன்று (மே 17) மாலை 6:00 மணிக்கு கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் எனும் தலைப்பில் தாமோதர தீட்சிதர், நாளை (மே 18) மாலை 6:00 மணிக்கு குருவருளே திருவருள் எனும் தலைப்பில் நாகைமுகுந்தன் பேசுகின்றனர்.மகா சுவாமிகள் ஜெயந்தி நாளான மே 19 காலை 9:00 மணிக்கு மகா சுவாமிகள் விக்ரஹம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு ஆன்மிகம் அது ஆனந்தம் எனும் தலைப்பில் எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி பேசுகிறார்.ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு செய்து வருகிறார்.