மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நாமசங்கீர்த்தன குழு சார்பில், காட்டூர் ஐய்யப்பன் பஜன் மண்டபத்தில், ஐந்தாம் ஆண்டாக ராதா மாதவ திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (மே., 18ல்) காலை, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.
அதைத் தொடர்ந்து கவுதம் பாகவதரின் பாடல் நிகழ்ச்சியும், மதியம் மழை வேண்டியும், உலக நன்மைக்காக யாக வேள்வியும் நடைபெறுகிறது.
மாலை, 6:00 மணிக்கு திருச்சி கல்யாணராமனின் திரவுபதிமானம் காத்தல் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது. நாளை ஹரிபஜனையும், ராதா மாதவ திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலையில் குசேலனும் - கண்ணனும் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு, 8:30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் தீபாராதனை யுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.