Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தணி திரவுபதியம்மன் கோவில் ... ராஜபாளையம் ராதா, சீதா கல்யாண உற்ஸவம் ராஜபாளையம் ராதா, சீதா கல்யாண உற்ஸவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மோற்சவத்தில் பக்தர்களை உபசரிக்கும் மடங்கள்: காஞ்சியில் 98 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
எழுத்தின் அளவு:
பிரம்மோற்சவத்தில் பக்தர்களை உபசரிக்கும் மடங்கள்: காஞ்சியில் 98 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:05

காஞ்சிபுரம்: வரதர் கோவில் பிரம்மோற்சவத்திற்கு வரும், வெளியூர் பக்தர்கள், 10 நாட்கள் தங்குவதற்கும், உணவு உபசரிப்புக்கான ஏற்பாடுகளையும், காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான மடங்கள் மற்றும் தர்ம சத்திரங்கள், 98 ஆண்டுகளாக செய்து வருகின்றன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள், நடைபெறுகிறது.10 நாள் உற்சவம்இந்த உற்சவத்தை காண வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், பஜனை கோஷ்டியினரும் காஞ்சிபுரம் வருகின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்களில் பலர் தங்களது உறவினர் வீடுகளிலும், தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கி செல்கின்றனர்.இருப்பினும், உற்சவம் நடைபெறும், 10 நாட்களும் இலவசமாக தங்கு வதற்கும், உணவு உபசரிப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் என்றே, வரதராஜ பெருமாள் கோவிலைச் சுற்றி, 12க்கும் மேற்பட்ட பழமையான மடங்கள், தற்காலிக மண்டபங்கள் உள்ளன.இங்கு, வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் அனைவருக்கும், தலைவாழை இலையில், கூட்டு, பொறியல், அவியல் போன்ற பதார்த்தங்களுடன், உணவு பரிமாறி உபசரிக்கின்றனர். மேலும், வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கும் இடவசதி செய்துள்ளனர்.

இது குறித்து, கரசங்கால் ததியாராதன அன்ன தானம் டிரஸ்டி, ஜானகி ராகவன் கூறியதாவது:எங்கள் டிரஸ்ட் சார்பில், 98வது ஆண்டாக, திருமண மண்பத்தை வாடகை எடுத்து, பக்தர் களை உபசரித்து, உணவு வழங்கி வருகிறோம்.ஜூலை 1க்கும் ஏற்பாடுஇதில், கருடசேவை மற்றும் தேரோட்டத்தின் போது, பக்தர்களுக்கு வடை பாயசத்துடன் விருந்து வழங்குகிறோம்.

திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கூரம் சேஷாத்ரி அதிதி சத்காரம் கூறியதாவது: அதிதி சத்காரம் என்ற பெயரில், சன்னிதி தெருவில், காலையும், மாலையும் பக்தர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். ஜூலை 1ல் நடைபெறும், அத்திவரதர் உற்சவத்தை காண வரும் பக் தர்கள் இலவசமாக தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar