செஞ்சி:நல்லாண்பிள்ளை பெற்றாள் பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் நயம்பாடி ஸ்ரீதரனின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. 23ம் தேதி காலை 6:00 மணிக்கு தர்மர், பாஞ்சாலிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு அரவான் சோறு அடித்தல் நிகழ்ச்சியும், துரியோதனன் படுகளமும் நடந்தது. மாலை6:00 மணிக்கு சக்தி கரகத்துடன் பக்தர்கள் தீ மிதித்தனர். ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.