Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசாதம் இது பிரமாதம்: பந்தர் லட்டு பாக்கியவான்கள் யார்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இனி எல்லாம் சுகமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
05:05

* பசிக்கும் போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள்.
* போதுமான அளவு உணவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது ஜீரணமாகி விடும்.  நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
* தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். விரல்களில் அள்ளி சாப்பிடுங்கள். ஜீரணத்திற்கும், விரல்களுக்கும் தொடர்புண்டு.
* தினமும் முடிந்தளவு விளையாடுங்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தான்.  
* தினமும் 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக சிந்தியுங்கள். உங்களின் ஆற்றல் வெளிப்படும்.
* இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள்.
* நல்ல புத்தகங்களைப்  படியுங்கள். பிள்ளைகளுக்கும் அதிலுள்ள நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
* குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனைக் கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக வாட்ஸ்– ஆப், பேஸ்புக்  போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.
* ஏழு மணி நேரம் தூங்குங்கள். இரவு 9:30 மணிக்கு தூங்கத் தொடங்கி, அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து விடுங்கள்.
* தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செல்லுங்கள். இதனால் உடலும், மனமும் நலம் பெறும்.
* உங்களை ஒருபோதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். மற்றவர்கள் பயணிக்கும் பாதை வேறு; உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.
* எப்போதும் நேர்மையான எண்ணங்களை  மட்டும் மனதில் எண்ணுங்கள்.
* கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்தளவு வேலை செய்யுங்கள்.
* மற்றவர் குறித்து புறம் பேசி சக்தியை வீணாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசுவதையும் பொருட்படுத்தாதீர்கள்.
* வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுங்கள். தேவையுள்ளவர்களுக்கு உதவுங்கள்.
* கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ்காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
* யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
* வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் அதில் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள்.
* சொல்ல வேண்டிய, இடங்களில் ’முடியாது’ என்று சொல்லிவிடுங்கள். இது பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க உதவும்.
* வெளிநாடு, வெளியூரில் உள்ள உறவினர், நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். மகிழ்ச்சி,  பரஸ்பர அன்பை இது மேம்படுத்தும்.
* மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மனபாரம் நீங்கும்.
* 60 வயதிற்கு மேலும், 10 வயதிற்கு கீழும் உள்ளவர்களை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம்.  
* மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படாதீர்கள். உங்களைப் பற்றி நினைப்பதே மற்றவரின் வேலையல்ல.
* யார் எது சொன்னாலும் கேளுங்கள். ஆனால் மனதிற்கு சரியெனபட்டதை செய்யுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar