Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நந்தி என்ற சொல்லின் பொருள் இறைவனின் திருமணக் கோலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது எது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2019
03:06

துறவி ஒருவர் கண்ணன் சிலைக்கு அபிஷேகம் செய்துகொண்டிருந்தார். அதுவும் எப்படி? கண்ணனின் நாமத்தை ஜபித்தபடியே, ஓட்டைக் குடத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த குளத்துக்குச் சென்று நீர் எடுத்து வருவார். அவர் கண்ணனுக்கு அருகில் வருவதற்குள் முக்கால்வாசி நீர் ஒழுகிவிடும். கால்வாசி நீர்தான் அபிஷேகம் ஆகும். பிறகு, மீண்டும் குடத்துடன் நீர் சேகரிக்கச் செல்வார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி, துறவியிடம் வந்து நல்லதொரு குடத்தைக் கொடுத்து, “இதைக் கொண்டு செல்லுங்கள்; நீரைச் சிந்தாமல் ஒழுகாமல் எடுத்து வரலாம் ” என்றாள். துறவி சிரித்தபடி பதில் சொன்னார்: “பெண்ணே, உன் குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டுவந்தால், நாலே நாலு குடங்களில் அபிஷேகம் முடிந்துவிடுமே! இதோ இந்த ஓட்டைக் குடம் மூலம் நீர் எடுத்து வந்தால், என் கண்ணனுக்கான பூஜையை வெகுநேரம் நீட்டிக் முடியுமே, அது உனக்குப் புரிய வில்லையா?” என்றார்.

அவரின் கிருஷ்ண பக்தியைக் கண்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண், ஆம்! இந்த அன்புதான் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது. அகிலமாளும் அந்தப் பரம்பொருள் யசோதா பிராட்டியின் தாம்புக் கயிற்றுக்குக் கட்டுப்பட்டது என்றால், அதற்குக் காரணம் அவளின் அன்புதான் இல்லையா? நம்மாழ்வாரின் கருத்து இது: பெருமான் கருத்த மேகத்தின் நிறம் கொண்டவன். தாமரை மலருக்கு ஒப்பான கண்கள் கொண்டவன். ஐம்பூதங்களிலும் நிறைந்தவன். அந்தச் சக்கரபாணியை நித்யசூரிகள் வாய்விட்டு ஜபித்து வணங்குகிறார்கள். அப்பேர்ப்பட்டவன் தாம்புக்கயிற்றுக்குக் கட்டுப்படுகிறான். நாமும், அன்போடு அவன் திருவடிகளைச் சரணடைவோம்; அகிலம் நம் வசமாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar