Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவநீத கிருஷ்ணன் கோவிலில் யாகசாலை ... ருசியில்லையே முருகா.. மருதமலை பஞ்சாமிர்தத்தில்! ருசியில்லையே முருகா.. மருதமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி கோயிலில் முதியோருக்கு தனி வரிசை: நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
மீனாட்சி கோயிலில் முதியோருக்கு தனி வரிசை: நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2019
12:06

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு முதியோர், குழந்தைகளுக்கு தனி வரிசையை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், இவ்விவகாரம் தொடர்பாக கோயில் இணை கமிஷனர் 2018 ல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை கண்டிப்பான முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

காரைக்குடி வழக்கறிஞர் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கட்டண தரிசன முறையில் பக்தர்கள் பணம் செலுத்தி தனி வரிசையில் செல்கின்றனர். கட்டணம் செலுத்த இயலாதோர் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். இதில் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.மே 17 ல் கோயிலுக்கு வந்த ஒரு பெண் மாரடைப்பால் இறந்தார். அங்கு மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. முதியோர், கர்ப்பிணி, குழந்தைகளுக்கு சிறப்பு தரிசன வரிசையை ஏற்படுத்தக்கோரி மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மணிகண்டன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு: இவ்விவகாரம் தொடர்பாக கோயில் இணை கமிஷனர் 2018 ல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், முதியவர், கர்ப்பிணிகளை விரைவாக தரிசனம் செய்ய வைக்க ஊழியர்கள் உதவ வேண்டும். நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. அதை கண்டிப்பான முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை இணை கமிஷனர் அவ்வப்போது ஆய்வு செய்து, கண்காணிக்க வேண்டும். வழக்கை பைசல் செய்கிறோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 
temple news
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar