கல்வி வளர்ச்சி என்றில்லாமல் எந்த தேவையை நிறைவேற்றவும் சுயமுயற்சி மிக அவசியம். கடவுள் வழிபாட்டால், நாம் இன்னும் துõண்டப்படுகிறோம். நன்றாகப் படிக்கிற மாணவனுக்கு தேர்வு நேரத்தில் படுக்கையில் கிடக்கிற அளவுக்கு ஜுரம் வந்தால் என்ன செய்ய முடியும்? படித்தால் மட்டும் போதாது. தடையின்றி நிறைவு பெற தெய்வஅருள் வேண்டும். ஏனெனில், கண்ணுக்குத் தெரியாத அந்த அருட்சக்தியே, நம்மை வழிநடத்தி வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது.