Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் அருகே டாஸ்மாக் கடையால் ... சரநாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் அருகே சிவன் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2012
10:03

திருவாரூர்: திருவாரூர் அருகே சிவன் கோவில் திருப்பணியின் போது பூமிக்கு அடியில் நான்கு அடி ஆழத்தில் இரண்டு ஐம்பொன் சிலைகளை தொழிலாளர்கள் கண்டெடுத்து தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா தோட்டக்குடி கிராமத்தில் ராஜராஜசோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட மணிகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், நேற்று கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு கடப்பாரையால் தொழிலாளர்கள் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கு அடி ஆழத்தில் குழியை தோண்டிய நிலையில் ஏதோ தட்டுப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் முழுவதும் அகலமாகவும், ஆழமாகவும் குழியை தோண்டினர். குழிக்குள் இருந்து, இரண்டு ஸ்வாமி ஐம்பொன் சிலைகளை கண்டெடுத்தனர். இரண்டு அடி உயரத்தில் சிவகாம சுந்தரி அம்மன் சிலை ஒன்றும், ஒன்றரை அடி உயரத்தில் பிரதோஷ நாயனார் சிலை ஒன்றும் இருந்தது. இந்த சிலைகளின் மொத்த எடை 15 கிலோ இருந்தது. இதுகுறித்து உடனடியாக தோட்டக்குடி வி.ஏ.ஓ., குமார், குடவாசல் தாசில்தார் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தாசில்தார் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் சென்று சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு ஐம்பொன் சிலைகளையும் பத்திரமாக குடவாசல் தாலுக்கா அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலுார் மாயாண்டி சித்தர் கோயிலில் 19 ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.ஜன., 8 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar