கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2019 03:06
கண்டாச்சிபுரம்:கெடார் அடுத்த வாழப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை இன்று 14ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து பூஜையும் நடக்கிறது.
கும்பாபிஷேக தினமான இன்று 14ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால சாலை பூஜையும், 9:30 மணிக்கு கோவிலில் உள்ள விநாயகர், திரவுபதி அம்மன், முத்து மாரியம்மன், கெங்கையம்மன், லிங்கேஸ்வரர், முத்தால் ராவுத்தர் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி நடத்தி வைக்கின்றார்.