பதிவு செய்த நாள்
15
ஜூன்
2019
03:06
அரூர்: பிரதோஷத்தையொட்டி, அரூரில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று 14 லில்,நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மேலும், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.