கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2012 10:03
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள இலுப்பைக்குடியில் வாலகுருநாதர் அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானத்தில் ஆண்டுக்கு இருமுறை அதிகாலையில் சூரிய ஒளி விழும். நேற்றும் சுவாமி, அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.