Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: ... 12ம் நூற்றாண்டு கோவில் புதுப்பிக்கப்படுமா? 12ம் நூற்றாண்டு கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க பரிசோதனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 மார்
2012
10:03

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, எவ்வகை மண்ணை பயன்படுத்துவது என ஆய்வுக்காக, 9 இடங்களில் பல்வகை களிமண் சேகரிக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன், இக்குளத்தில் சிமென்ட் பூசப்பட்டு, ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு, தொட்டியாக மாற்றப்பட்டது. தரைக்கு அடியில் தண்ணீர் ஊற வாய்ப்பில்லாமல் போனதாலும், கோவிலைச் சுற்றி, பல 100 அடிகளுக்கு ஆழ்குழாய் அமைத்ததாலும், கோவில் தூண்களில் விரிசல் ஏற்பட்டன. கும்பாபிஷேகத்தின் போது அவை சரிசெய்யப்பட்டன. மேலும், தண்ணீர் தேங்கியிருப்பதால் பாசி படர்ந்து, குளத்தின் அழகையும் கெடுத்தது. இதன்காரணமாக, சிமென்ட் தளத்தை அகற்றி, 25 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, கடந்த, நவ., 21ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சென்னை ஐ.டி.டி., பேராசிரியர் ரவீந்திர கட்ஜு ஆலோசனையின் பேரில், கற்கள் அகற்றப்பட்டு, "ஜியோ மெம்பரிங் தொழில் நுட்பத்தில், அதாவது குளம் முழுவதும் உலோக விரிப்பை விரித்து, அதன்மேல், 2 அடிக்கு களிமண் நிரப்பி, நிரந்தர தண்ணீர் தேக்கப்படும். தாமரைகளும் வளர்க்கப்படும். இதற்காக எவ்வகை களிமண் தண்ணீரை உறிஞ்சாமல் இருக்கும், பொற்றாமரைக்குளத்தில் தோண்டப்பட்ட மணல், தண்ணீரை உறிஞ்சுமா என, ஐ.டி.டி., மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆய்வு செய்து வருகிறது. கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், ""களிமண் உறிஞ்சும் தன்மை குறித்து ஆய்வு செய்ய, செக்கானூரணி உட்பட 9 இடங்களில் குளங்களின் களிமண் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் ஆய்வறிக்கை கொடுக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில், எவ்வகை களிமண்ணை பயன்படுத்துவது என முடிவு செய்யப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar