Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன், விநாயகர் கோயிலில் ... அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களை கணக்கிட கருவி அத்தி வரதரை தரிசிக்க வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழ்பெற்ற புரி கோவில் ரதயாத்திரை துவக்கம்
எழுத்தின் அளவு:
புகழ்பெற்ற புரி கோவில் ரதயாத்திரை துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2019
11:07

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், உலகப்புகழ் பெற்ற, புரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை நேற்று துவங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஒடிசாவின், புரி நகரில், தொன்மையான ஜெகன்னாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஒன்பது நாட்கள் நடத்தப்படும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது.இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை, நேற்று துவங்கியது. சுவாமி ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகிய மூன்று உற்சவர் சிலைகளும், அலங்கரிக்கப்பட்ட, மூன்று பிரமாண்ட தேர்களில், வீற்றிருந்தனர்.யானைகள் அணிவகுத்து முன் செல்ல, அதன் பின், மூன்று தேர்களும் அசைந்தாடி சென்றன. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மூன்று தேர்களுக்கு முன்பும், ஏராளமானோர் பாரம்பரிய நடனங்கள் ஆடினர்.நேற்று பிற்பகலில், ரத யாத்திரை துவங்கியது. இருப்பினும், அதிகாலையிலேயே லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். தேர்களுக்கு அருகில், இடம்பிடிக்க அலைமோதினர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புரியில் நேற்று துவங்கிய ரத யாத்திரை, ஒன்பதாவது நாளில், கண்டிச்சா கோவிலில் நிறைவடையும். ரத யாத்திரையை முன்னிட்டு, புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.ஒடிசா கவர்னர், கணஷே் லால், முதல்வர், நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கே.எஸ்.ஜாவேரி உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள், ரத யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அமித் ஷா ஆரத்தி: குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் உள்ள ஜெகன்னாதர் கோவிலிலும், நேற்று ரத யாத்திரை நடந்தது. காலையில் நடந்த மங்கள ஆரத்தியில், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார். தேர் இழுக்க, லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு, 8:30 மணிக்கு, ரத யாத்திரை நிறைவடைந்தது.

மேற்கு வங்க எம்.பி., நடனம்:
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், இஸ்கான் அமைப்பு, ஜெகன்னாதர் ரத யாத்திரையை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, மற்றும் திரிணமுல் காங்., - எம்.பி., நுஸ்ரத் ஜஹான் பங்கேற்றனர். அப்போது பேசிய, மம்தா, பங்க்ளா என்ற கோஷத்தை வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தின் பெயரை, பங்க்ளா என மாற்ற, மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுஸ்ரத் ஜஹான், தேருக்கு முன், உற்சாகமாக நடனம் ஆடினார். இதை, பக்தர்கள் கைதட்டி வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar