Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யதோக்தகாரி பெருமாள் கோவிலில் நாளை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2012
12:03

நாமக்கல்: ஏழூர் பெரிய மாரியம்மன் கோவிலில், இன்று (மார்ச் 21) மாலை 4 மணிக்கு, குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த ஏழூர் கிராமத்தில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 6ம் தேதி இரவு, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், காப்பு கட்டுதலும், தினமும் காலை அபிஷேக ஆராதனை, இரவு பூவோடும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7 மணிக்கு, வடிசோறு படையல் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு, அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மார்ச் 21) காலை 6 மணிக்கு அக்னி குண்டம் பற்ற வைத்தல், மாலை 4 மணிக்கு குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தீ குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இரவு 8 மணிக்கு அம்மன் உற்சவம் அலங்காரம், புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். நாளை (மார்ச் 22) காலை 7 மணிக்கு பொங்கல், சிறப்பு அலங்காரமும், மாலை 6 மணிக்கு மாவிளக்கு, அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மார்ச் 23ம் தேதி காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 3 மணிக்கு வண்டி வேஷம், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar