பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, அரும்பாக்கம் கிராமத்தில், 25 ஆண்டுக்கு பின் நடந்த, மூங்கிலாத்தம்மன் திருவிழாவை, மக்கள் படையலிட்டு கொண்டாடினர்.
திருவள்ளூர் அருகே, மெய்யூர் அடுத்த, அரும்பாக்கம் கிராமத்தில், மூங்கிலாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 25 ஆண்டுகளுக்கு பின், ஊர் மக்கள் ஒன்றுகூடி, திருவிழா வை நேற்று 11ம் தேதி நடத்தினர்.
இதற்காக, 27ம் தேதி, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் 10ம் தேதி காலை, மூங்கிலாத்தம்மனுக்கு ஊர் கூடி பொங்கல் வைத்தல், மாலையில், மூங்கிலாத்தம் மனை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நேற்று 11ம் தேதி காலை, மூங்கிலாத்தம் மன் ஊர்வலம் காலை துவங்கியது. வீடு வீடாக ஊர் படையல் தீபாராதனை நடைபெற்றது. மாலையில், தாய்வீடு படையல் பெற்று, கோவிலை சென்று அடைந்தது. கரகாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.