Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோவில் சீரமைக்க பக்தர்கள் ... நினைத்தது நிறைவேற 108 சுற்று நினைத்தது நிறைவேற 108 சுற்று
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதரை தரிசித்தார்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
எழுத்தின் அளவு:
அத்தி வரதரை தரிசித்தார்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2019
12:07

காஞ்சிபுரம்: ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்தி வரதரை, நேற்று, குடும்பத்துடன் தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், விமரிசையாக நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தை, தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கின்றனர்.இந்நிலையில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், நேற்று மதியம், டில்லியிலிருந்து தனி விமானம் மூலம், சென்னைக்கு வந்தார்.

அங்கிருந்து, ஹெலிகாப்டரில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மைதானத்திற்கு, 2:50 மணிக்கு வந்தார். உடன், அவரது குடும்பத்தினரும் வந்தனர்.பாதுகாப்புக்காக, மேலும் இரு ஹெலிகாப்டர்கள், பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில் இறங்கின.தொடர்ந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 3:10 மணிக்கு, ஜனாதிபதி வந்தார். உடன், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் உள்ளிட்டோர் வந்தனர்.கோவில் பட்டாச்சாரியார்கள், ஜனாதிபதியை, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின், வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த அத்தி வரதரை, ஜனாதிபதி, அவரது குடும்பத்தினர், தரிசனம் செய்தார்.பின், 3:25 மணிக்கு, கோவிலில் இருந்து காரில் புறப்பட்டு, மீண்டும், பச்சையப்பன் கல்லுாரி மைதானத்திற்கு சென்று, ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டார். டி.ஜி.பி., திரிபாதி தலைமையிலான, 2,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஏமாற்றம்: ஜனாதிபதியை, பூங்கொத்து கொடுத்து வரவேற்க, அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., பன்னீர்செல்வம், அமைப்பு செயலர் சோமசுந்தரம் ஆகியோர், கோவில் வெளியே காத்திருந்தனர். ஜனாதிபதி வருவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், அ.தி.மு.க., நிர்வாகிகளை, போலீசார், அங்கிருந்து அழைத்து சென்றனர். பூங்கொத்து கொடுக்க அனுமதி அளிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar