பதிவு செய்த நாள்
14
ஜூலை
2019
12:07
திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருநெல்வேலியில் உள்ள, நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம், தேரோட்டம் நடக்கும். இந்தாண்டு விழா, 6ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை, 8:30 மணிக்கு, தேரோட்டம் நடைபெற்றது. கலெக்டர், ஷில்பா, அமைச்சர்கள், ராஜு, ராஜலட்சுமி மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.