மதுரை: ஆனி மாத பவுர்ணமியான (ஜூலை., 16ல்) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் நள்ளிரவு 1:32 க்கு துவங்கி அதிகாலை 4:30 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் சந்திரனை கர்ப்பிணிகள் பார்க்க கூடாது. மாலை 6:00 மணிக்கு முன்பாக உண்பது நல்லது. அதிகாலை 4:30 மணிக்கு மேல் சந்திரனை பார்க்கலாம். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், ரோகிணி, அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். ஜூலை 17 காலையில் கட்டாயம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.