கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
845ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை கடந்த கடந்த ஜூலை 4 தொடங்கி நாள் தோறும் இரவு 10:00 மணி வரை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஜூலை., 13ல்) மாலை மாலை 5:00 மணியளவில் 40 அடி உயர அடிமரம் ஊன்றப் பட்டது. நேற்று (ஜூலை., 14ல்) மாலை 4:30 மணியளவில் ஏர்வாடி நல்ல இப்ராகீம் சந்தனக்கூடு தைக்காவில் இருந்து மேளதாளங்கள் வாண வேடிக்கை முழங்க தர்கா வரை ஊர்வலமாக வந்தனர்.
குதிரைகள் யானை முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்காவை மூன்று முறை சுற்றி வலம் வந்தது. மாலை 6:30 மணியளவில் யானை மீது கொண்டு வரப்பட்ட கொடியினை ஹக்தார் நிர்வாகத்தினர் கொடியேற்றம் செய்தனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் பொது மகா சபையினர் செய்திருந்தனர். ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுகாதார மருத்துவ வசதிகள் செய்யப் பட்டிருந்தன.
வருகிற ஆக., 26 மாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு விழா ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 4:00 மணியளவில் மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. செப்., 2 மாலை யில் கொடியிறக்கம் செய்யப்படும்.