சிவகாசி: சிவகாசியில் ஸ்ரீஸ்ரீமுரளிதர சுவாமிஜி காட் இந்தியா டிரஸ்ட் சார்பில் பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை நடந்தது. அலங்கார தேரில் சுவாமி கிருஷ்ணர், பல ராமர், சுபத்ரை ஸமேதராக சிவகாசியின் முக்கிய வீதி வழியாக வந்து பொது மக்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோலாட்டம் ஆடி, கீர்த்தனம் பாடி வந்தனர். சிவகாசி நாமத்வார் சத்சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.