ராமேஸ்வரம் : ஜூலை 17 ல் நள்ளிரவு 1:33 முதல் 4:32 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், அன்றிரவு 8:00 மணிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டது.
1:33 மணிக்கு கோயிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். பின் அதிகாலை 3:00 மணிக்கு அக்னி தீர்த்த கடலில் தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நேற்று காலை 5:00 மணிக்கு கோயில் நடை திறந்து கிரகண அபிஷேகம், பூஜை நடந்தது. இரவு அர்த்தஜாம பூஜை நடந்தது. இதன் பின் கோயில் ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 1:33 மணிக்கு பிறகு வானில் சந்திரகிரகணம் ஏற்பட்டதை அக்னி தீர்த்த கரையில் நின்றிருந்த பக்தர்கள் பார்த்தனர்.