பதிவு செய்த நாள்
18
ஜூலை
2019
01:07
திருப்பூர் : ஆடி மாதம் நேற்று (ஜூலை., 17ல்) பிறந்தது. ஆடி வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். பூச்சாட்டு பொங்கல் விழா, குண்டம், சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.
அன்னதானம், கூழ் ஊற்றும் வைபவங்கள் அதிகளவில் நடைபெறும். பலரும் வேண்டுதல் களை நிறைவேற்றுவர்.பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வன பத்ர காளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வர வசதியாக, தலா 20 சிறப்பு பஸ்களை ஆடி வெள்ளியன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது.
வரும், 30ம் தேதி மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, மறு நாள் (31 ம் தேதி) ஆடி அமாவாசை, அதே வாரம் சனிக்கிழமை (ஆக., 3 ம் தேதி) ஆடி பதினெட் டாம் பெருக்கு.’ஐந்து நாட்களில், மூன்று விசேஷ தினங்கள் என்பதால், வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வருவர். பயணிகள் வந்து செல்ல வசதியாக, பயணி கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பஸ் அதிகரிக்கப்படும். பிற கோவில்களுக்கும் தேவைப் படின் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,’ என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.