’பக்தி தோன்றிய இடம் எது?’ திருப்பூரில் கோமடம் சுவாமி விளக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2019 02:07
திருப்பூர் : ”பக்தி தேவதை அவதரித்த இடம் தமிழகம். இது தமிழர்க்கு பெருமை சேர்க்கும் விஷயம்,” என, கோமடம் சுவாமி பேசினார்.
திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில், ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், 16 வது ஆண்டு நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இதில் மதுரை அழகர் கோவில், கோமடம் சுவாமி பேசிய தாவது:உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அந்தளவு ஆத்மாவுக்கு பக்தி அவசியம். பகவானை ஆராதனை செய்வதன் மூலம் நாம் அவரை அடையலாம்; அவர் அன்புக்கு ஆளாக லாம். இதை எப்படி மேற்கொள்வது என்பதை வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதங்களை வேத வியாசர் நான்கு வேதமாக பிரித்து நமக்கு அளித்தார்.
வேதங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தான் இதிகாசங்கள், புராணங்கள் வடிவமை க்கப்பட்டுள்ளன. இவற்றைத்தான் உபன்யாசம் மூலம் அனைத்து மக்களும் அறியும் வகை யில் வழங்கப்படுகிறது. பக்திக்கு தியானம் அவசியம். மோட்சம் பெற பாகவதம் அவசியம். பக்தி என்பது திராவிட பூமியான தமிழகத்தில் நெல்லையில், ஆழ்வார்கள் மூலம் தோன்றியது. உலகத்துக்கே பக்தியை கொண்டு சென்ற பூமி தமிழகம் என்பதில், பெருமிதம் கொள்ள வேண்டும். நாலாயிர திவ்யப் பிரபந்தம் வழங்கிய ஆழ்வார்களால் தான், பக்தி தேவதை இங்கு தோன்றினாள். இவ்வாறு அவர் பேசினார்.