சூலுார் : ஆடி மாதப்பிறப்பு மற்றும் சந்திர கிரகணத்தை ஒட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று முன்தினம் (ஜூலை., 16ல்) நள்ளிரவு சந்திர கிரஹணம் ஏற்பட்டது.
இதையடுத்து, சூலுார் வைத்தீஸ்வரன் கோவில், வேங்கடநாத பெருமாள் கோவில், கருமத்தம் பட்டி சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று (ஜூலை., 17ல்) அதிகாலை பரிகார பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, ஆடி மாதப்பிறப்பு சிறப்பு பூஜைகள் துவங்கின. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் குடும்பத் துடன் வழிபட்டனர்.