பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2019 02:07
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் உள்ள பத்மாவதி தாயார் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், தீபாரதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு கருட சேவை உற்சவம் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.