காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடியில் அம்மனை குளிர்விப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. இதற்காக பெண்கள் முந்தைய நாளிலிருந்தே அம்மியில் மஞ்சளை அரைக்க தொடங்குகின்றனர்.
நேற்று கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 37 அம்மியில் 251 கிலோ மஞ்சள் அரைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். மொத்த மஞ்சளும் கையால் அரைக்கப்பட்ட நிலையில் ஆடி முதல் வெள்ளியான இன்று பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு பச்ச மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது.முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் பிரதிபா செய்திருந்தார்.முத்துமாரியம்மன் கோயிலுக்கு நகரத்தார் சார்பில் பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்தல் ஜூலை 23ம் தேதி நடைபெற உள்ளது. கோயில் சார்பில் 26-ம் தேதி திருவிளக்கு பூஜையும், பிராமணர்கள் சார்பில் 30-ம் தேதி பால்குடமும், ஆகஸ்ட் 2-ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் 1008 சங்காபிஷேகமும், ஆக.4-ம் தேதி ஆடிபூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரமும், 9-ம் தேதி 4ம் வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், 16-ம் தேதி 5ம் வெள்ளியை முன்னிட்டு கோமாதா பூஜையும் நடைபெற உள்ளது.