பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
01:07
திருப்போரூர்: ஆடி மாதம் துவங்கியுள்ளதால், அம்மன் கோவில்களில், சீரமைப்பு பணி நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரசிதிபெற்ற பல அம்மன் கோவில்கள் உள்ளன.
தவிர, ஒவ்வொரு கிராமத்திலும், கிராம தேவதையான எல்லையம்மன், முத்துமாரியம்மன், செங்கழினியம்மன், வேம்புலியம்மன் என்ற பெயர்களில், கோவில்கள் உள்ளன.அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி துவங்கியுள்ளதால், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டாரங்களில், 200க்கும் மேற்பட்ட கிராம அம்மன் கோவில் விழாக்களில், ஊரணி பொங்கல் இடுதல், கூழ்வார்த் தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட விழாக்கள் நடக்கவுள்ளன.இதற்காக, கோவிலுக்கு சுண்ணாம்பு அடித்தல், முட்செடி அகற்றுதல், பூஜை பொருட்கள் துாய்மைப்படுத்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் நடக்கின்றன.