பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
01:07
காஞ்சிபுரம்: பென்னலுார் அன்னை பிரளய காளியம்மன் கோவிலில், 21ம் ஆண்டு தீ மிதி திருவிழா, இன்று (ஜூலை., 19ல்) நடைபெறுகிறது.
உத்திரமேரூர் அடுத்த பென்னலுாரில் அன்னை பிரளய காளியம்மன், நாத முனீஸ்வரர் கோவி லின், 21ம் ஆண்டு விழா, 17ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று (ஜூலை., 18ல்) காலை, அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும், தீ மிதிக்கும் பக்தர்களுக்கும் காப்பு புனைதல் நடந்தது.மதியம், கூழ்வார்த்தலும், இரவு நாடகமும் நடந்தது.
தீ மிதி விழாவான, இன்று (ஜூலை., 19ல்) காலை, 7:00 மணிக்கு அபிஷேகமும், காலை, 10:00 மணிக்கு, குரு பூஜையும், மிளகாய் பொடி அபிஷேகமும், மதியம், 1:00 மணிக்கு தீ மிதிக்கும் பக்தர்களுக்கு, நாக்கு அலகு போடுதல் நிகழ்வும் நடைபெறுகிறது.மாலை, 3:00 மணிக்கு பால்குடமும், ஜலம் திரட்டுதலும் நடைபெறுகிறது. மாலை, 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடைபெறுகிறது.
தொடர்நது, வான வேடிக்கை, நாதஸ்வரம், வெள்ளைக்குதிரை கணக்கிளி நாட்டியம் நடைபெறுகிறது. இரவு, 10:00 மணிக்கு, ஐந்து ரதங்களுடன் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, புதிய வாழ்க்கை கல்வி மற்றும் பொருளாதா முன்னேற்ற அறக்கட்டளையினர் மற்றும் பென்னலுார் கிராமத்தினர் செய்துள்ளனர்.