Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் புனித நீராடி ... பம்பையில் வெள்ளம்: ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை பம்பையில் வெள்ளம்: ஐயப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி வரும் பக்தர்களே உஷார்
எழுத்தின் அளவு:
சதுரகிரி வரும் பக்தர்களே உஷார்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
11:07

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரியில்  நிலவும் தண்ணீர் பற்றாக்குறை அன்னதான மடங்கள் மூடபட்டதால் நிலவும் உணவுப்பற்றாக்குறையால் ஆடி அமாவாசைக்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமப்படும் நிலை உள்ளது.  இதை தவிர்க்க  பக்தர்கள் தங்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வருவதே நல்லது.

2015க்கு பின் சதுரகிரியில்  மழையில்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மாதம்தோறும் பவுர்ணமி அமாவாசையை முன்னிட்டு  4 நாட்கள் கோயிலுக்கு வரும் சில ஆயிரம் பக்தர்களுக்கு தண்ணீர் தருவதற்கே அறநிலையத்துறை தவித்து வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை  6 நாட்கள்   வரும் பல லட்சம் பக்தர்களுக்கு தேவையான தண்ணீரை  அறநிலையத்துறையால் வழங்க முடியாத நிலை உள்ளது.


தற்போது அறநிலையத்துறையால் தேக்கப்படும் தண்ணீர்  மொட்டை போடும் பக்தர்களுக்கும் கழிப்பறைகளுக்கும் மட்டுமே பூர்த்தியாகும்.  குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் வழங்குவது சாத்தியமில்லாத நிலையே உள்ளது. மலையில் செயல்பட்டு வந்த தனியார் அன்னதான மடங்கள் மூடபட்டதால்  அறநிலையத்துறை வழங்கும் உணவோ கஞ்சியோ பக்தர்களின் பசியை போக்கும் விதத்தில் இருக்காது. இதுவரை 10 க்கு மேற்பட்ட இடங்களில் தனியார் அன்னதானம் வழங்கிய நிலையில்  தற்போது அறநிலையத்துறை வழங்கும் அன்னதானத்தை பெறுவதில் மிகவும் சிரமங்கள் ஏற்படும். இதை தவிர்க்க  பக்தர்கள் தங்களின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் வருவதே நல்லது.  தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாலும்  மலையில் சுற்றுசூழலை பாதுகாக்கவும்  பக்தர்கள் இரவில் கோயிலில் தங்குவதை தவிர்க்கலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar