பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்: பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2012 11:03
உளுந்தூர்பேட்டை :உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் அபிதகுசலாம்பிகை வலமுறை அகத்தீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு நேற்று காலை அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முற்பகல் 11.45 மணிக்கு யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. தொடர்ந்து நெய், பழ வகைகள், பால் யாககுண்டத்தில் ஊற்றப்பட்டன. பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வெற்றிலையில் எழுதி, யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். கோவில் பரம்பரை அறங் காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில் ஐந்து குருக்கள் யாகத்தை நடத்தினர். பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.