மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2012 10:03
செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக்காப்பு அலங் காரமும் செய்தனர். காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 12 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 1 மணிவரை தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று தெலுங்கு வருட பிறப் பும், அடுத்து சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகள் என மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. மேல்மலையனூரின் அனைத்துத் தெருக்களும் கூட்ட நெரிசலும், வாகன நெரிசலுமாக காணப்பட்டது.