Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவானைக்கோவிலில் பங்குனி ... பழநி கோயிலில் நவீன முறையில் 2 வது ரோப் கார்! பழநி கோயிலில் நவீன முறையில் 2 வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் ஊஞ்சல் உற்சவம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மார்
2012
10:03

செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளிக்காப்பு அலங் காரமும் செய்தனர். காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 12 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 1 மணிவரை தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் செஞ்சி டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நேற்று தெலுங்கு வருட பிறப் பும், அடுத்து சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகள் என மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது. மேல்மலையனூரின் அனைத்துத் தெருக்களும் கூட்ட நெரிசலும், வாகன நெரிசலுமாக காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar