சிவகாசி:சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றம் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலிக்கிறார்.