பதிவு செய்த நாள்
05
ஆக
2019
11:08
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று சுவாமி, அம்மன் மாலை மாற்று வைபவம் நடந்தது, இன்று ஆடித் திருக்கல்யாணம் நடக்கிறது.
ஜூலை 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்கிய ஆடித் திருக்கல்யாண திருவிழாவில், நேற்று ஆடித் தபசை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு வெள்ளி கமல வாகனத்தில் அம்மன் தபசு மண்டகப்படியில் எழுந்தருளியதும், கோயில் நடை அடைக்கப்பட்டது.பகல் 11:00 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் 2:40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் முருகேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், தபசு மண்டகபடியில் இருந்து சுவாமி, அம்மன் மாலை 5:00 மணிக்கு கோயிலுக்கு திரும்பியதும், நடை திறக்கப்பட்டது. இன்று இரவு 8:00 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் விழா நடக்கிறது.