திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் பங்குனித்திருவிழா கோலாகலமாக துவங்கியது.நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா நடக்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.10 நாட்கள் திருவிழா நடக்கிறது. நான்காம் திருநாள் 30ம்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதியுலா நடக்கிறது. 10ம்திருநாள் ஏப்ரல் 5ம்தேதி மாலை 6.50 மணிக்கு மேல் 7.20 மணி வரை அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடக்கிறது.விழாவில் கோயில் அலுவலர்கள் செங்கோல், சுவாமி திருபாதம் சுமந்து சுவாமி, அம்பாளை சுற்றி வந்து செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், பணியாளர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.