Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் கோவிலில் விசாக ... ஓசூர் முத்து மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு ஆடி நான்காம் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2019
03:08

ஈரோடு: ஆடி நான்காம் வெள்ளியையொட்டி, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி வெள்ளியில் வழிபாடு நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஈரோடு மாநகரில் உள்ள, பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், வலசு மாரியம்மன், சத் திரம் மாரியம்மன், கோட்டை பத்ரகாளியம்மன், திருவள்ளுவர் வீதி பொட்டு அம்மன், கள்ளுக் கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன், சின்னசேமூர் மஹாமாரியம்மன், கோட்டை வாரணாம்பிகையம்மன் உள்ளிட்ட நகரில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கோவில் களில் நேற்று (ஆக., 9ல்) காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அம்மன், சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சின்னசேமூர் மஹா மாரியம்மன் வெற்றிலைக்காரி அலங்காரத்திலும், ஈரோடு கோட்டை ஆருத்ர காபாலீஸ்வரர் கோவிலில், வாராணம்பிகை சன்னதியில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. கேழ்வரகு கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டது.

* அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில், பவானி, வர்ணாபுரம் சமயபுரம் மாரியம்மன், மூன்று லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதே போல் வேம்பத்தி சொக்கநாச்சியம்மன், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

* கோபி அருகே பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், ஏராளான பக்தர்கள் நேற்று (ஆக., 9ல்) காலை முதல் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், ஏராளமான பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல், மொடச்சூர் தான்தோன்றியம் மன், கோபி சாரதா மாரியம்மன் கோவில், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில் களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar