செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஆடி மாத ராம பஜனை நடந்தது.செஞ்சி சங்கரா பரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில் நேற்று (ஆக., 11ல்) ஆடி மாத ராம பஜனை நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று (ஆக., 11ல்) காலை 8 மணிக்கு கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ் சனம் செய்தனர். 9 மணிக்கு பஜனையும் 2 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.இதில் ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். சபை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.ஜனார்த்தனன் பஜனை நடத் தினார்.நிர்வாகிகள் சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்பு, ராமு, ராமசாமி, உபயதார் சுதாகர் மற்றும் பஜனை கோஷ்டியினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.