பதிவு செய்த நாள்
12
ஆக
2019
02:08
திருத்தணி:விநாயகர் கோவிலில், நேற்று (ஆக., 11ல்) நடந்த மண்டலாபிஷேக விழாவில், ஆயிரத் திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.திருத்தணி ஒன்றியம், எர்ப்பநாயுடு கண்டிகை கிராம த்தில், புதியதாக கமலவிநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின், மஹா கும்பாபிஷேகம், ஜூன் மாதம், 14ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது.
இந்நிலையில், கும்பாபிஷேகம் நடந்து, 48 நாட்கள் முடிந்ததால், நேற்று, (ஆக., 11ல்) மண்டலாபி ஷேக விழா நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை மற்றும் 48 கலச ங்கள் வைத்து, கணபதி மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.அதை தொடர்ந்து, மூலவர் கமலவிநாயகருக்கு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி., அரி, முன்னாள் ஒன்றிய சேர்மன் ரவி உட்பட, கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.