Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரியமாணிக்க பெருமாள் கோயில் தேர்த் ... கோவில்களில் அறங்காவலர் நியமனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2012
11:03

திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இந்த ஆண்டைய பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் காலை ஹரிநாம கீர்த்தனை நடந்தது. மாவட்ட தேவஸ்தான தந்திரி மாத்தூர்மடம் சங்கரநாராயணரு திருக்கொடியேற்றினார். கோயில் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை தீபாராதனை, ராமாயண பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது. இரண்டாம் நாளான இன்று முதல் நான்காம் நாள் வரை காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சுவாமி பவனி வருதல், தீபாராதனை, ராமாயண பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு கதைகளி நடக்கிறது.ஐந்தாம் நாள் ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு ஆத்மிக அரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஐயப்பன் தலைமை வகிக்கிறார். ஆதிகேசவ பக்தர் சங்க நிர்வாகி தங்கப்பழம் வரவேற்கிறார். நாராயணன் நாயர், ராஜேந்திரன் முன்னிலை வகிக்கின்றனர். தொல்லியல்துறை முன்னாள் இயக்குனர் ராமசந்திரன், பாலசந்தர், ஜெயசீலன், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஆதிகேசவ பெருமாள் அருள்மாலை வெளியிடப்படுகிறது. சிவசங்கரன் நன்றி கூறுகிறார்.தொடர்ந்து திருவம்பாடியில் திருக்கொடியேற்று, பஜனை, சுவாமி கருட வாகனத்தில் பவனி வருதல், கதைகளி நடக்கிறது. ஆறாம் நாள் ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு ஓட்டன்துள்ளல், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், கதைகளி நடக்கிறது.ஏழாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு சமய சொற்பொழிவு, சுவாமி பல்லக்கில் பவனி வருதல், கதைகளி, எட்டாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தீபாராதனை, கதைகளி நடக்கிறது. ஒன்பதாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், தீபாராதனை, இரவு சிறப்பு நாதஸ்வர இன்னிசை, கருட வாகனத்தில் சுவாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், கதைகளி, பத்தாம் நாள் காலை சுவாமி பவனி வருதல், எழுந்தருளல், மாலை சுவாமி கருட வாகனத்தில் ஆறாட்டிற்கு மூவாற்றுமுகம் எழுந்தருளல், தீபாராதனை, சிறப்பு நாதஸ்வர இன்னிசை, வாணவேடிக்கை, கதைகளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar