Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சாஸ்தா கோயிலில் குரங்குகள் தொல்லை! திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரியமாணிக்க பெருமாள் கோயில் தேர்த் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2012
11:03

திருநெல்வேலி:டவுன் கரிய மாணிக்க பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்களின் "கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நெல்லை டவுன் கரிய மாணிக்க பெருமாள் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 19ம் தேதி காலை கொடியேற்றமும், மாலையில் திருமஞ்சனமும், இரவு அன்னவாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. 23ம் தேதி இரவு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. கடந்த 24ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை சுவாமி வீதி உலா மற்றும் திருமஞ்சனமும், இரவு சுவாமி பல்வேறு வாகங்களில் வீதி உலாவும் நடந்தது. பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தேருக்கு எழுந்தருளலும் நிகழ்ச்சியும், 7 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு பூம்பல்லக்கு நடந்தது. இன்று(29ம் தேதி) மதியம் 12 மணிக்கு குறுக்குத்துறை பத்மநாப தீர்த்த கட்டடத்தில் நீலமணிநாதர் சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தீர்த்தவாரியும், மாலை பல்லக்கு வீதி உலாவும், 30ம் தேதி காலை உத்ஸவ சாந்தி, கலசமாற்று மற்றும் திருமஞ்சனமும், மாலை சந்திரபிரபை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 31ம் தேதி மாலை ஊஞ்சல் திருநாளும், 31ம் தேதி காலை ஸ்ரீராமநவமி உற்சவம், திருமஞ்சனமும், இரவு ஆஞ்சநேயர் வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar