கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில், சஷ்டி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2019 02:08
கம்மாபுரம்: ஆவணி மாத சஷ்டியையொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியர் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.கம்மாபுரம் அடுத்த ஊ.மங்கலம் எலுமிச்சை சுப்ரமணியர் கோவிலில், நேற்று காலை 8:00 மணியளவில் அபி ஷேக ஆராதனை, மாலை 4:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
அதேபோல், சி.கீரனுார், விருத்தகிரிகுப்பம், விளக்கப்பாடி, கோ.மாவிடந்தல் சுப்ரமணியர் கோவில்களில் ஆவணி மாத சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.