Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமந்தராயர் கோவிலில் மகா ... செப்.,12ல் கோட்டை வாசல் விநாயகர் கும்பாபிஷேகம் செப்.,12ல் கோட்டை வாசல் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைகள் விசர்ஜனம்: பவானி, நொய்யலில் கரைப்பு
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலைகள் விசர்ஜனம்: பவானி, நொய்யலில் கரைப்பு

பதிவு செய்த நாள்

06 செப்
2019
12:09

அன்னுார்: அன்னுார், சூலுார் மற்றும் கருமத்தம்பட்டியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி சார்பில், அன்னுார், இந்திரா நகர், கணேசபுரம், கடத்துார், கரியாக்கவுண்டனுார், அக்கரை செங்கப்பள்ளி உள்பட, 50 இடங்களில், செப்., 2ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, அன்னுார் – ஓதிமலை ரோட்டில், விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஏகல் வித்யாலயா அமைப்பின், தென்பாரத அமைப்பாளர் விஸ்வநாதன் காவிக்கொடி அசைத்து, விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

விசர்ஜன ஊர்வலம், இரவு 7:00 மணிக்கு துவங்கி, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக சென்று, ஓதிமலை ரோட்டை 9:30 மணிக்கு அடைந்தது.  500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அங்கிருந்து, லாரிகளில் ஏற்றப்பட்டு, சிறுமுகை அருகே பவானி ஆற்றில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சூலுார், கருமத்தம்பட்டியில் இ.மு., சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, மூன்று நாட்கள் வழிபாடுகள் நடந்தன. நேற்று முன் தினம் மாலை, கருமத்தம்பட்டியில் மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. பின், சாமளாபுரத்தில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. சூலுார் பெருமாள் கோவில் திடலில் நடந்த விசர்ஜன விழா பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., கந்தசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விநாயகர் சிலைகள், மார்க்கெட் ரோடு, திருச்சி ரோடு, கலங்கல் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று, நொய்யல் ஆற்றங்கரையில் முடிந்தது. அங்கு, சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar