பழநி:ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தில், பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேஷனில் மட்டும் 3 மணிநேரம் வரை காத்திருந்தனர்.
பழநி மலைக்கோயிலுக்கு நேற்று (செப்., 8ல்) ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்தனர். மலைக்கு 3 நிமிடத்தில் செல்லும் ’ரோப்கார்’ ஆண்டு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வின்ச் ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் 2 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.