பதிவு செய்த நாள்
30
செப்
2019
02:09
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், ஹார்விபட்டி கோயில் களில் நவராத்திரி விழா நேற்று 29ல் துவங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் நேற்று 29ல் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (செப்., 30) முதல் அக்., 7 வரை நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசு, மகிஷா சுரவர்த்தினி, சிவபூஜை, சரஸ்வதி பூஜை அலங்காரங்களில் அம்பாள் அருள்பாலிப்பார். அக்., 8 மாலை தங்கக்குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும்.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ராஜேஸ்வரி அம்மன், பாண்டியன் நகர் கல்யாண விநாய கர் கோயிலில் புவனேஸ்வரி அம்பாள், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் துர்க்கை அம்மன் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிப்பர்.