’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என சொல்வார் திருவள்ளுவர். இதன் பொருள் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்க வேண்டும். அதை தவறாமல் பின்பற்றும் ஒரே ஜீவன் காகம். ’தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என மற்ற காகங்களை அழைத்த பின்னரே உண்ணும் பண்பு கொண்டது. இதற்கு சோறிட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும். இது சோறு எடுக்காவிட்டால் நம் முன்னோருக்கு குறை நேர்ந்ததாக சொல்லுவர். எமலோகத்தின் வாசலில் காவல் புரியும் இதனை எமதர்மனின் துாதுவன் என அழைப்பர். பிதுர் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலமான கயாவில் ’காக சிலை’ என்றொரு பாறை உள்ளது. அதில் தான் பிண்டம் வைத்து முன்னோர்களை வணங்குவர்.