பதிவு செய்த நாள்
04
அக்
2019
03:10
திருப்பூர்:ஆயுத பூஜையை முன்னிட்டு, நகரில் உள்ள கடைகளில், அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய வண்ண காகித தோரணங்கள், விற்பனைக்குவந்துள்ளன.
நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவில்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நவராத்திரி நிறைவாக விஜயதசமி கொண்டாட்டம், 8ம் தேதி, நடக்கிறது. அதேபோல், கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடைபெறவுள்ளது.
இதற்காக வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் சுத்தம் செய்து, பூஜைக்கு தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இயந்திரங்கள், கருவிகள், அலுவலகப் பயன்பாட்டு பொருட்களுக்கு மலர் மாலைகளும், கட்டட பகுதிகளிலும், மாவிலை தோரணம், வண்ண காகிதங்கள் போன்றவையும் பயன்படுத்தப்படும்.இதற்காக, கடைகளில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணக் காகித தோரணங்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, நுழைவாயிலை அலங்கரிக்கும் மாவிலை தோரணம், மலர் மாலைகள், மின் னொளியில் மிளிரும் அழகிய தோரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வர்த் தகர்களும், பொதுமக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.