கடலாடி:கடலாடி அருகே கொண்டு நல்லான்பட்டியில் உள்ள குடிநீர் கிணற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீருக்குள் ஜல விநாயகர் உள்ளார்.
வெள்ளை பாறை நுரைக்கற்களால் ஆன 2 அடி உயரம்கொண்ட விநாயகரை கொண்டு நல்லான்பட்டி கிராம மக்கள்கிணற்றுக்குள் வைத்து பாதுகாக்கின்றனர்.
கொண்டுநல்லான்பட்டியை சேர்ந்த விவசாயி சிவசங்கர பாண்டியன் 48,கூறியதாவது: மாவட்டத்தின் கடை கோடி பகுதியாகவும், துாத்துக்குடி விளாத்திகுளம் அருகே அமைந்து ள்ளது. பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவும் நேரத்தில் மட்டுமே கிணற்றில் நீருக்குள் வைக்கப்பட்ட விநாயகரை வெளியில் எடுத்து ஒருவாரம்சிறப்பு பூஜைகள், பொங்கல் வைத்து வழிபாடு செய்வோம்.
பூஜைகள் நிறைவு பெற்றதும் கண்டிப்பாக இப்பகுதியில் மழை பெய்ய ஆரம்பிக்கும். பின் மீண்டும் கயறு கட்டி கிணற்றுக்குள் பாதுகாப்பாக அத்திவரதரைப் போல நீருக்குள் ஜல விநாயகரை வைத்துவிடுவோம், என்றார்.விநாயகர் வைக்கப்பட்டுள்ள கிணற்றின் குடிநீர் சுவை மிகுந்தது. எப்போதும் வற்றாது. சுற்றுவட்டார கிராம மக்களுக்குகுறைவில்லாமல் தண்ணீர் வழங்குகிறது.