பதிவு செய்த நாள்
05
அக்
2019
02:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை, வள்ளலார்கோயில் ( வதாரண்யேஸ்வரர் ) கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அக் 13 முதல் லட்சார்ச்சனை ஆரம்பம். 29 அதிகாலை 3.40 க்கு தருமையாதீனம் முன்னிலையில் குருப்பெயர்ச்சி தீபாராதனை. 29,30,31 மூன்று நாட்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சர்வதோஷ பரிகார குருமகாயாகம் நடைபெறுகிறது.
ஐப்பசி மாதம் 12-ந் தேதி (29.10.2019) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெய ர்ச்சியாகிறார். இதனை முன்னிட்டு திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனம் மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் மேதாதக்ஷிணாமூர்த்திக்கு, புரட்டாசி மாதம் 26ம் தேதி (13.10.2019) ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை துவங்கி ஐப்பசி மாதம் 22ம்தேதி (08.11.2019) வெள்ளிக்கிழமை லட்சார்ச்சனை நிறைவடைகிறது.
கங்கைக்கு பாவவிமோசனமும், ரிஷயதேவருக்கு ஆணவம் நீக்கி உபதேசமும் அருளியவர் மயிலாடுதுறை மேதாதக்ஷிணாமூர்த்தியாவார். நவக்ரஹ ப்ருஹஸ்பதி எனும் குருபகவானால் வழிபடப்பட்டு அநுக்ரஹம் செய்ததால் குரு அநுக்ரஹ மேதா தக்ஷிணாமூர்த்தியாகப் போற்றப்படுகிறார். குருபெயர்ச்சியினால் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நீங்கிடவும், மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருபார்வையால் கோடி நன்மை ஏற்படவும், லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.
தொடர்புக்கு: அர்ச்சகர் ஸ்ரீ கண்டகுருக்கள் 8825863586