பிள்ளையார்குளம் அரக்காசு அம்மா தர்கா மதநல்லிணக்க கந்துாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2019 02:10
சாயல்குடி:சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரக்காசு அம்மா தர்காவில் கந்துாரி விழா கோலாகலமாக நடந்தது.
செப்., 27ல் தர்கா முன்பு கொடியேற்றப்பட்டது. நாள்தோறும் உலக நன்மைக்கான மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டது. நேற்று (அக்., 4ல்) காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை நேர்த்தி கடன்களாக ஆட்டுக் கிடாக்கள், சேவல்கள் பலிபீடத்தில் பலியிடப்பட்டது. அரக்காசு அம்மா தர்காவின் மக்பராவில் புனித சந்தனம் பூசி, பிறை வடிவ பச்சைப்போர்வை போர்த்தப்பட்டு, மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை 8000 பேருக்கு மேல் கறிவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
பிள்ளையார்குளம் விழா கமிட்டியாளர்கள் கூறியதாவது:சாயல்குடி சுற்றுவட்டார கிராமங் களில் இருந்து ஏராளமான இந்துக்களும், முஸ்லிம்களும் தர்கா வழிபாட்டில் பங்கேற்கின் றனர். புரட்டாசி வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் மத நல்லிணக்க விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். மழை வளம் சிறந்து விவசாயம் பெருகிடவும், தண்ணீர் கஷ்டம் இல்லாமல் இருப்பதற்காக கூட்டு பிரார்தனை நடத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள தர்காவின் மகத்துவம் பெருகி வருகிறது. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக எங்கள் ஊர் விளங்குவது பெருமையாக உள்ளது, என்றனர்.